சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்


சென்னை: சுவாதி படுகொலை வழக்கை விசாரிக்க பிரத்யேகத் திட்டம் வகுத்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சுவாதியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை, மென் பொறியாளர் சுவாதி கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படுபவரின் சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் வெளியிட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வழக்கின் தீவிரம் காரணமாக, ரயில்வே போலீஸாரிடம் இருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு விசாரணை நேற்று மாற்றப்பட்டது. குற்றவாளியைப் பிடிப்பதில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றமும் நேற்று அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை செயலர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this

Related Posts