கேரளாவில் மீண்டும் வெளியாகும் ‘பாகுபலி’!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தை மீண்டும் கேரளாவில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வருடம் ஜூலை 10-ம் தேதி படம் வெளியானது. ஆனால் அதே ஜூலை மாதம் பாகுபலி படத்தின் மலையாளப் பதிப்பை மீண்டும் வெளியிட உள்ளோம். தேதி இன்னமும் முடிவு செய்யவில்லை. திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்க்க மக்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று கேரளாவில் படத்தை வெளியிட்ட குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Share this

Related Posts