சுவாதி கொலையாளியை நெருங்குகிறது காவல்துறை.. உதவுகிறது ஆதார் அட்டை!


சென்னை: இன்போசிஸ் ஊழியர், சுவாதி கொலை குற்றவாளியை கைது செய்வதில் ஆதார் அட்டை உதவிகரமாக இருக்கப்போகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகளான சுவாதி (24), செங்கல்பட்டு அருகேயுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பணியிடம் செல்வதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவர் ரயிலுக்காக காத்திருந்தபோது, வாலிபர் ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

ஆதார் உதவி 
   பழைய குற்றவாளிகளின் கை ரேகையோடு கொலையாளியின் கை ரேகை ஒத்துப்போகவில்லை என்பதால், ஆதார் அடையாள அட்டை பிரிவு அதிகாரிகளின் துணையை நாடியுள்ளனர் சென்னை போலீசார்.

விசாரணை மாற்றம் 

 கொலையாளியை அடையாளம் காணும்வகையில் 2 சிசிடிவி வீடியோக்கள் கிடைத்தும், கொலையாளியை நெருங்க முடியாத ரயில்வே போலீசாரின் திறமையின்மை காரணமாக, கொலை வழக்கு நேற்று சென்னை சிட்டி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

கை ரேகை துருப்பு சீட்டு 
 ஆதார் அட்டையில் அனைவரது கை ரேகையும் கட்டாயம் பதிவாகியிருக்கும். கொலையாளியின் கை ரேகையை வைத்து அதற்கு மேட்ச்சான கைரேகையை தேடினால், கொலையாளியின் முழு விவரமும் போலீசாரின் கைக்கு வந்துவிடும். இதை வைத்து போலீசார் அவனை வேட்டையாடிவிடலாம். எனவே இக்கொலை வழக்கில் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரிவாள் பறிமுதல் 
  சுவாதியை கொன்ற, கொலையாளி அரிவாளை, சற்று தொலைவிலுள்ள தண்டவாளத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றான். போலீசார் அதை பறிமுதல் செய்த நிலையில், அதில் பதிவான கைரேகையையும், சுவாதி உடலில், ஆடையில் கொலையாளி கை பட்ட இடங்களில் சேகரிக்கப்பட்ட கை ரேகையையும் கொண்டு தங்களிடமுள்ள கொலையாளி, ரவுடிகளின் கை ரேகையுடன் ஒத்துப்போகிறதா என ஆய்வு செய்தனர்.

Share this

Related Posts