குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சற்று குறைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு விழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது.  குற்றாலம் பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் சீசன் களைகட்டியுள்ளது.

Share this

Related Posts