தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

வாலையாறு: கோவை அருகே வாலையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதை அடுத்து கோவையில் யாகம் நடத்தப்பட்டு வருகின்றது.

Share this

Related Posts