சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் மாயம்

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியாகியுள்ளன.
அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஷின்மோ என்ற கிராமத்தை சேர்ந்த 40 வீடுகளும் புதைந்துள்ளன. இதனால், ஆற்றின் நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகளில் பாதுகாப்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திபெத்திய - அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share this

Related Posts