நீட் தேர்வு முடிவு: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: நீட் தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகம் பின்தங்கியது, மாணவர்களின் குற்றம் அல்ல. அரசின் குற்றம். நீட் தேர்வு முடிவு நமக்கு பாடம் அளித்துள்ளது. முதலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். கல்வி துறையில் செய்யப்படும் மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் மாயம்

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியாகியுள்ளன.
அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஷின்மோ என்ற கிராமத்தை சேர்ந்த 40 வீடுகளும் புதைந்துள்ளன. இதனால், ஆற்றின் நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகளில் பாதுகாப்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திபெத்திய - அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.