செல்போனை சார்ஜ் செய்ய இனி மணிபர்ஸ் போதும்

நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது.
தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும்.
இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கள் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போது இரண்டு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் பெரிதாகவும், மணி பர்ஸுக்குள் மடித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை அமெரிக்காவில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

News Feed: இயக்குனர், நடிகர் பாலு ஆனந்த் மரணம்

News Feed: இயக்குனர், நடிகர் பாலு ஆனந்த் மரணம்

News Feed: இயக்குனர், நடிகர் பாலு ஆனந்த் மரணம்:
விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல்தெரு உள்பட பல  படங்களை இயக்கியவரும், நகைச்சுவை நடிகருமான பாலு ஆனந்...
News Feed: கபாலி இசை வெளியீட்டால் 'ரெமோ' ஃபர்ஸ்ட் லுக் தள்ளிவ...

News Feed: கபாலி இசை வெளியீட்டால் 'ரெமோ' ஃபர்ஸ்ட் லுக் தள்ளிவ...

News Feed: கபாலி இசை வெளியீட்டால் 'ரெமோ' ஃபர்ஸ்ட் லுக் தள்ளிவ...: 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டால், சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் ...

100 யூனிட் இலவச மின்சார திட்டம் மக்களை ஏமாற்றும் செயல்-டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணைப்படி 2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் அதற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்.

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஏற்கனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை.

ஏற்கனவே மீளமுடியாத கடன் சுமையில் சிக்கி, ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வரும் மின்சார வாரியத்தை மேலும் நலிவடையச் செய்யவே இத்திட்டம் வழிவகுக்கும். அதே நேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீங்கள் சுவைத்தது உண்டா???