தமிழகத்தில் லேசாக உயரும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிப்பால் 32 பேர் பலியாகியுள்ளனர்.

Bluejelly8.blogspot


தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது 20,225 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 541616 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 531173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8367 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,33,228 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,28,626 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,222 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 1,50,085 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,92,24,674 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,917 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,37,632 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,579 ஆக உயர்ந்துள்ளது


Share this

Related Posts