சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: நீட் தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகம் பின்தங்கியது, மாணவர்களின் குற்றம் அல்ல. அரசின் குற்றம். நீட் தேர்வு முடிவு நமக்கு பாடம் அளித்துள்ளது. முதலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். கல்வி துறையில் செய்யப்படும் மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
