2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்… சென்னை கருணையற்ற நகரமா?

சுவாதி கொலையை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து… ‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவி வருகிறது. 
சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டபோது, ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். கொலையாளி ஒரே ஆள்தான். கல்லை கொண்டு தாக்கத் தொடங்கியிருந்தால்கூட, கொலையாளி மிரளத் தொடங்கியிருப்பான். சுவாதி உதவிக்கு யாரும் வராத நிலையில் தனி ஆளாக போராடி பலியாகியுள்ளார்.
கொலையாளி தப்பி ஓடும்போதும், யாரும் பிடிக்க முன்வரவில்லை. கொலையாளி அங்கிருந்து சென்ற பின்னரும்கூட உயிருக்கு போராடிய சுவாதிக்கு உதவி செய்யகூட யாரும் முன்வரவில்லை. சென்னை மக்களின் இந்த கருணையற்ற முகத்தை விமர்சித்து, வாட்ஸப்பில் ”நான் சுவாதி பேசுகிறேன்” என்று உருக்கமான பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
”இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதாயத்தில் நானும் ஒருத்தி தான்.
எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன், என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.
உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களின் மனதுக்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழியபட்டு தான் இறந்தேன்.
உங்களில் ஒருவருக்குகூட அதை தடுக்க ஆண்மை இல்லையே. அவனை தடுக்காத உங்களின் கயமைகூட எனக்கு புரிந்தது. ஆனால் அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணீர் கொடுக்க கூடவா ஆள் இல்லை.
2 மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள்கூட உங்களை சுடவில்லையா? பெண் பிள்ளைகள் வெளியில் போகும்போது பார்த்துப் போக சொல்லும் நீங்கள், அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச் செய்யுங்கள்.”
சொல்ல வார்த்தைகள் இல்லை..!

சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்


சென்னை: சுவாதி படுகொலை வழக்கை விசாரிக்க பிரத்யேகத் திட்டம் வகுத்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சுவாதியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை, மென் பொறியாளர் சுவாதி கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படுபவரின் சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் வெளியிட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வழக்கின் தீவிரம் காரணமாக, ரயில்வே போலீஸாரிடம் இருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு விசாரணை நேற்று மாற்றப்பட்டது. குற்றவாளியைப் பிடிப்பதில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றமும் நேற்று அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை செயலர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிராவோ அசத்தல்; தெ.ஆப்பிரிக்கா சொதப்பல் - வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி




வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
 

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக அபாரமாக ஆடிய டேரன் பிராவோ 103 பந்துகளில் [12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 102 ரன்கள் எடுத்தார். கீரன் பொல்லார்ட் 71 பந்துகளில் [7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 62 ரன்களும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 46 பந்துகளில் [3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 40 ரன்களும் எடுத்தனர்.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


 
அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான குவிண்டன் டி காக் [6], ஃபாப் டு பிளஸ்ஸி [3], டி வில்லியர்ஸ் [2], ஹசிம் ஆம்லா 16, டுமினி [5], கிறிஸ் மோரிஸ் [7] என அடுத்தடுத்து வெளியேறியதால் திக்குமுக்காடியது. ஒரு கட்டத்தில் 65 ரன்களுக்குள் முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்தது.
 
இதனால், தென் ஆப்பிரிக்கா 100 ரன்களுக்குள்ளேயே சுருண்டு விடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ஆபாந்தவனாக நின்ற பெஹார்டியன் 35 ரன்களும், வெய்ன் பார்னல் 28 ரன்களும் எடுத்து அணியின் மானத்தை காப்பாற்றினர்.
 
அதேபோல கடைசியில் களமிறங்கிய இம்ரான் தாஹிர் 32 ரன்களும், மோர்னே மோர்கல் 29 ரன்கள் எடுத்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் நரைன் மற்றும் கேப்ரியேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிகள் நிர்வாண ஊர்வலம்

ராஜஸ்தான் மாவட்டம் உதய்ப்பூரில் அங்குள்ள ஒரு சமூகத்தில் உள்ள ஒரு இளம் பெண்  கட்டுப்பாட்டை மீறி திருமணமான வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். அந்த் பெண் தன் காதலனுடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார். பெண்ணின்  வீட்டிற்கு சென்ற அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள  இதனையடுத்து அப்பெண்ணின் கணவர், அந்த பெண்ணையும், அடித்து உதைத்து உள்ளனர். 
பின்னர் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்த அவர்கள் அந்த பெண்ணையும் அவரது  காதலரையும் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாட்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர்.
அப்பெண்ணின் கணவர் நிர்வாணப்படுத்தப்பட்ட இருவரின் புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அந்த பெண்ணின் காதலர் குடும்பத்தினர் 80,000 ரூபாயை செலுத்தி தங்கள் மகனை அழைத்துச்சென்றுள்ளனர். 
இது தொடர்பாக காவல் துறையினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 3 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு



தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது, சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட் சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 15 ஆவது முறையாக ர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.