ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி!

 ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இன்று (ஆக., 17) அரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைபாடு இருந்தது. கோவிட் பரிசோதனை செய்ததில் நெகடிவ் என்று தான் ரிசல்ட் வந்துள்ளது. அதன் பின்னர் டில்லி செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்


பிரதமர் மோடியும், நீரஜ் சோப்ராவும் முகக்கவசங்களின்றி வெறும் 2 அடி இடைவெளியில் நின்று பேசினர்.

இந்நிலையில் அரியானா மாநிலம் பானிப்பட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்றார். நிகழ்ச்சியின் போதே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடும் காய்ச்சல் இருப்பதாக ஆங்கில செய்திச் சேனல் ஒன்று கூறியுள்ளது.

தமிழகத்தில் லேசாக உயரும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிப்பால் 32 பேர் பலியாகியுள்ளனர்.

Bluejelly8.blogspot


தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது 20,225 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 541616 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 531173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8367 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,33,228 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,28,626 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,222 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 1,50,085 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,92,24,674 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,917 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,37,632 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,579 ஆக உயர்ந்துள்ளது


நீட் தேர்வு முடிவு: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: நீட் தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகம் பின்தங்கியது, மாணவர்களின் குற்றம் அல்ல. அரசின் குற்றம். நீட் தேர்வு முடிவு நமக்கு பாடம் அளித்துள்ளது. முதலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். கல்வி துறையில் செய்யப்படும் மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் மாயம்

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியாகியுள்ளன.
அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஷின்மோ என்ற கிராமத்தை சேர்ந்த 40 வீடுகளும் புதைந்துள்ளன. இதனால், ஆற்றின் நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகளில் பாதுகாப்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திபெத்திய - அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெயலலிதா ஆசியுடன் எனது தலைமையிலான ஆட்சி தொடரும்- ஓபிஎஸ் - Instant Portal

எதிர்க் கட்சி, மாற்றுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் எனது ஆட்சி தொடரும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசியுடன் எனது தலைமையில் ஆட்சி நீடிக்கிறது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் தனது தலைமையிலான ஆட்சி தொடரும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசியுடன் நல்லாட்சி தொடர எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். கடந்த ஒருவார காலமாக அதிமுகவில் அதிகாரப்போட்டி நடந்து வருகிறது. முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற போட்டியில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தன. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவார காலமாக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டனர். 8 எம்எல்ஏக்கள், 11 எம்.பிக்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது. தீர்ப்புக்குப் பிறகு பிரிந்து போன எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது என்பது இன்று உறுதியாகியுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து எம்எல்ஏக்களும் கசப்புகளை மறைந்து ஒன்றாக இணைய வேண்டும் என்றும், கடந்த ஒருவாரகாலமாக தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் அவர், எதிர்கட்சியினர், மாற்றுக்கட்சியினர் ஆதரவு இன்று ஆட்சியை தொடருவேன் என்றும், தனது தலைமையிலான ஆட்சி ஜெயலலிதாவின் ஆசியுடன் தொடரும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், அம்மாவின் ஆசி நமக்கு உள்ளதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிசெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் நீக்கம்- சசிகலா அதிரடி அறிவிப்பு - Instant Portal

சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.
முதல்வர் பதவியில் இருந்து தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓ. பன்னீர்செல்வம். இதையடுத்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவித்தார் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கலகக் குரலுக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலர் பொன்னையன் உள்ளிட்டோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.