வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணி: ஜூலை 16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணி: ஜூலை 16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள வாகன (ஜீப்) ஓட்டுநருக்கான 7 காலிப்பணியிடங்களுக்கான அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  தகுதியுள்ளவர்கள் வரும் 16.07.2016 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இனசுழற்சி முறையில் பொது, ஆதிதிராவிடர், அருந்ததியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும். 1.9.2015 அன்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 35 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது  இதர பிரிவினர் 30 வயதுக்கு உள்ளாகவும் இருக்கவேண்டும்.  குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை. அரசு ஓட்டுநர் உரிமத்துடன், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்களை ஓட்டியதற்கான நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை - 622 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தடை என்பது முடிவல்ல - துவக்கம் ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்

Takkaru Takkaru - Releasing ON 25th


தடை என்பது முடிவல்ல - துவக்கம்
ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்



கொலை நகரமான தலைநகரம்..! சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை

சென்னை  ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



சென்னை ராயப்பேட்டை, முத்து தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு.பட்டினப்பாக்கத்தில் ஸ்வீட் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19), சினேகா (16) என்று மூன்று மகள்கள்.  முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பவித்ரா, பரிமளா  சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். சினேகா பிளஸ்2 படித்தார். இவர்கள் கடந்த வாரம் சொந்த   ஊரான காரைக்குடிக்குச் சென்று வந்துள்ளனர்.


கடந்த திங்கள் கிழமை முதல் இவர்களது வீடு பூட்டியே கிடந்துள்ளது.இந்நிலையில் இன்று (வெள்ளி) காலை அவர்கள் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து ராயபேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நான்கு பெண்களும் நிர்வாண நிலையில் ஆளுக்கொரு மூலையில் கிடந்துள்ளனர். இவர்களது உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. தலைமறைவாக இருந்த சின்னராசுவை போலீஸார் அவரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரையும் சின்னராசு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த கொலை நடந்துள்ளதாகவும், எங்களது கவனத்தை திசைத் திருப்பவே 4 பேரையும் நிர்வாணமாக்கியுள்ளார்  சின்னராசு என காவல்துறையினர் தெரிவித்தனர். 


மனைவி, மகள்கள் நிர்வாண நிலையில் இருப்பதால் சின்னராசு சைக்கோவாக இருக்கலாமா என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அட, சிவகார்த்திகேயனா இது? ‘ரெமோ' முதல் பார்வை! (படம் & வீடியோ)


சிவகார்த்திகேயன் நடித்துவரும் ரெமோ படத்தின் முதல் பார்வைப் புகைப்படங்களும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை பாக்கியராஜ் பாரதி இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.டி. ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.



செப்டம்பரில் மினி ஐபிஎல் போட்டி: பிசிசிஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குப் பதிலாக மினி ஐபிஎல்-ஐ தொடங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
உலகின் முக்கிய கிரிக்கெட் கிளப்புகளைக் கொண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது. ஆனால், அதற்குப் பெரிய வரவேற்பு இல்லாததால் மாற்று ஏற்பாடாக வேறொரு போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்று அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் வரும் தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
* இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு.
* செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டி நடைபெறும். எல்லா 8 ஐபிஎல் அணிகளும் இதில் பங்கேற்கும். இரண்டு வாரங்கள் நடைபெறும்.
* ரஞ்சி டிராபி ஆட்டங்கள் பொதுவான ஆடுகளத்தில் நடத்தப்படும்.

ஆச்சரியமான தகவல்: வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம்

சென்னை: இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.
நியூ யார்க்கில் இருந்து செயல்படும் மெர்சர் என்று நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் மக்கள் வாழ அதிகம் செலவாகும் நகரங்களில் தில்லி முதலிடத்திலும், மும்பையை அடுத்து சென்னை 3ம் இடத்திலும் உள்ளது.
மனிதர்களுக்குத் தேவையான 200 அடிப்படைப் பொருட்களின் விலைகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வீடு முதல் போக்குவரத்து வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள், பல நகரங்களில் கிளைகளை வைத்துள்ள நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் எடுத்துக் கொண்டால், சென்னை மாநகரம் 158வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் உலகளவில் சென்னை 157வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
துணி மற்றும் காலணிகளைப் பொருத்தவரை சென்னையில் சற்று விலை அதிகம் என்றும், தில்லி மற்றும் மும்பையை ஒப்பிடும் போது பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை சென்னையில் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டை விட, 13% சென்னையில் அதிகரித்துள்ளதும், கடந்த ஓராண்டில் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசே விற்பனை செய்யும் மது, சென்னையில் மலிவாகக் கிடைக்கும் என்று நினைத்தால் அதுவும் தவறு. மும்பையோடு ஒப்பிடுகையில் சென்னையில் மது வகைகளின் விலையும் அதிகம்.
தகவல் தொழில்நுட்ப நகரமாக மாறி வரும் பெங்களூரு 22வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 180வது இடத்தைப் பிடித்துள்ளது.