வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணி: ஜூலை 16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள வாகன (ஜீப்) ஓட்டுநருக்கான 7 காலிப்பணியிடங்களுக்கான அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  தகுதியுள்ளவர்கள் வரும் 16.07.2016 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இனசுழற்சி முறையில் பொது, ஆதிதிராவிடர், அருந்ததியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும். 1.9.2015 அன்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 35 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது  இதர பிரிவினர் 30 வயதுக்கு உள்ளாகவும் இருக்கவேண்டும்.  குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை. அரசு ஓட்டுநர் உரிமத்துடன், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்களை ஓட்டியதற்கான நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை - 622 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Share this

Related Posts