செப்டம்பரில் மினி ஐபிஎல் போட்டி: பிசிசிஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குப் பதிலாக மினி ஐபிஎல்-ஐ தொடங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
உலகின் முக்கிய கிரிக்கெட் கிளப்புகளைக் கொண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது. ஆனால், அதற்குப் பெரிய வரவேற்பு இல்லாததால் மாற்று ஏற்பாடாக வேறொரு போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்று அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் வரும் தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
* இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு.
* செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டி நடைபெறும். எல்லா 8 ஐபிஎல் அணிகளும் இதில் பங்கேற்கும். இரண்டு வாரங்கள் நடைபெறும்.
* ரஞ்சி டிராபி ஆட்டங்கள் பொதுவான ஆடுகளத்தில் நடத்தப்படும்.

Share this

Related Posts