நள்ளிரவில் ரகசியமாக நடந்த படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் 2.0 படத்தின் சில காட்சிகளை நள்ளிரவில் சென்னை வணிகவளாகத்தில் படமாக்கியுள்ளனர்.

2.0 படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை டெல்லியில் உள்ள மைதானத்தில் எடுத்தனர். ரஜினி, அக்ஷய் குமார் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் நள்ளிரவு 2 மணிக்கு 2.0 படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் நடத்தினார். காலை நேரத்தில் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் சேரும் என்பதால் நள்ளிரவில் அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தியுள்ளார். காலை 6 மணிவரை நீடித்த இந்த படப்பிடிப்பில் அக்ஷய் குமாரும் வேறு சில நடிகர்களும் கலந்து கொண்டனர். ரஜினி கலந்து கொள்ளவில்லை.

Share this

Related Posts